வேலூர், தோட்டப்பாளையம், ஸ்ரீ நாராயணா மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 79வது சுதந்திர தின விழா! முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து, சமபந்தி போஜன நிகழ்ச்சி!!
வேலூர் மாவட்டம், வேலூர், வேலூர், தோட்டப்பாளையம், ஸ்ரீ நாராயணா மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 79வது சுதந்திர தின விழா முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து, சமபந்தி போஜன நிகழ்ச்சி, ஸ்ரீ நாராயண ரெட்டியார் சத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுதந்திரதின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் மாமன்ற உறுப்பினரும் மண்டல குழு தலைவருமான நரேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரா.அருணாச்சலம், நா.சுகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் காஞ்சனா கிருஷ்ணமுர்த்தி, தர்வம்பாள் குப்புசாமி, வி.எஸ்.முருகன் மற்றும் பகுதிவாழ் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த பொது விருந்திற்கு சிறப்பான முறையில் சத்திரத்தின் செயல் அலுவலர் மு. பாலசுப்ரமணி, பணியாளர்கள் சபரிநாதன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.


கருத்துகள்
கருத்துரையிடுக