வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 79 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவின் முன்னணி இதயவியல் நிபுணரும், சி.எம்.சி. மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் டாக்டர். ஜார்ஜ் ஜோசப் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த சுதந்திர தினவிழாவில் வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் விஐடி பல்கலைக்கழக அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்
கருத்துரையிடுக