நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா!!
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் முழுஉருவச் சிலைக்கு மற்றும் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.


கருத்துகள்
கருத்துரையிடுக