5 ஜி சேவை வழங்கிட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!
தேனி மாவட்டம்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் எப் ஆர் எஸ் என்ற கருவிழியை ஸ்கேன் செய்யும் முறையை கைவிடவேண்டும். 5 ஜி சேவை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேனியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர். என். வனிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில நிர்வாகி எம். நாகலட்சுமி சிஐடியு மாவட்ட தலைவர். டி. ஜெயபாண்டி மாவட்ட பொருளாளர். ஜி. சண்முகம் ஆகியோர் பேசினார்கள்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக