அரக்கோணத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!எம். எல் .ஏ .சு.ரவி அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் முன்பு 25ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என எம். எல். ஏ .சு.ரவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியதாவது முன்னாள் முதலமைச்சர்.தமிழக எதிர்க்கட்சித் தலைவர். அஇஅதிமு கழகம் பொதுச் செயலாளர். எடப்பாடியாரை ஒருமையில் அவன் என்றும் ஒரு பிரதான எதிர்க்கட்சித் தலைவரை திமுக அமைச்சர் பேசியுள்ளார்.
இதற்கு பதிலடியாக, நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தின் முன்பு, இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. இவ்வாறு சு.ரவி எம். எல். ஏ அறிவிப்பு செய்துள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக