கைத்தறி துறை சார்பாக கரூரில் நடைபெற்ற 11 வது தேசிய கைத்தறி தின விழா! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம்,கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கைத்தறி துறை சார்பாக கரூரில் நடைபெற்ற 11வது தேசிய கைத்தறி தின விழாவில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நெசவாள பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக