ராணிப்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற கட்சியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்! அமைச்சர்.ஆர். காந்தி பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை முத்துக்கடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்தீர்மானவிளக்கபொதுக்கூட்டம்நடைபெற்றது.கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர். சீ மா. ரமேஷ் கர்ணா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தொல். திருமாவளவன் அவர்கள் பங்கேற்று, திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் எழுச்சி பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.
அதில் பேசியதாவது, இந்து மதத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல ஆனால் சட்ட மாமேதை அம்பேத்கர் கூட்டின் படி மதச்சார்பனையை கடைப்பிடிக்காததை எப்பொழுதும் கண்டிப்போம் பாரதிய ஜனதா அரசு நாட்டை ஆள மதம் வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுவது மதச்சார்பனையை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதால் எனக்கும் அந்த கட்சிக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபடும் இல்லை
விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்பொழுதும் இந்துவாசிக்கு இந்து மதத்தை வெறுப்பதும் இல்லை, ஆனால் சனாதன தர்மத்தை நிச்சயமாக ஏற்காது மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் அரசுடன் தான் தற்போது விடுதலை சிறுத்தை கட்சி கைகோர்த்துள்ளது இவ்வாறு அவர் பேசினார், மேலும் இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி மற்றும் அவர்கள் கூட்டணி கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.






கருத்துகள்
கருத்துரையிடுக