பண்ருட்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விழா!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களால் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. பண்ருட்டி உழவர் சந்தை வளாகத்தில் (ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில்) பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் விவசாயிகளுக்கு விதைகளைவழங்கிசிறப்புரையாற்றினார் உடன் உதவி வேளாண்மை இயக்குனர் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் விவசாய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக