பண்ருட்டியில் நடைபெற்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் அவர்களின் திருவுருவ பட திறப்பு விழா!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அதிமுக முன்னாள் கவுன்சிலரும் நகர கழக பொருளாளரும் மறைந்த பண்ருட்டியார் முருகன் திருவுருவ பட திறப்புவிழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் தொழில்துறை அமைச்சருமான எம். சி .சம்பத் திறந்து வைத்து மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் அன்னதானங்கள் வழங்கினார்.
திறப்பு விழாவில் நகர செயலாளர் மோகன் அவைத் தலைவர் ராஜதுரை கவுன்சிலர் வெங்கடேசன் கட்சி பொறுப்பாளர்கள் செல்வம் ஸ்ரீதர் கலைமணி தொழிலதிபர்கள் எஸ் .வி. அருள், விஜயரங்கன், குமரவேல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக