கரூரில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரச்சார பொதுக்கூட்டம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி.கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் தி.மு.க உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரச்சார பொதுக்கூட்டம், இன்று, கரூர் உழவர் சந்தை அருகில், தலைமை கழக பேச்சாளர். ஆரூர் மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்ற மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்ப அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர - பகுதி - ஒன்றிய - பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட - கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக