கடலூர்- சிஎன் பாளையத்தில் சாலை அருகே உள்ள செம்மண் குவாரியால் போக்குவரத்து அபாயம்!!
கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம் சி என் பாளையம் ஊராட்சி கனிமவள கொள்ளை . சி என் பாளையத்தில் இருந்து சிலம்பினாதன் பேட்டை போகும் சாலையில் அமைந்துள்ளது இந்த செம்மண் குவாரி அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்மண் எடுத்து வருகிறார்கள் சாலை ஓரத்தில் இந்த செம்மண் குவாரி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் பலமுறை கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை காவல் துறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த செம்மண் குவாரியை உடனே தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக