நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியை. வசந்தி, உதவி ஆசிரியைகள். சுந்தராம்பாள், அமுதா, ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி முதலியன இடம் பெற்றன. இறுதியாக மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக