அரக்கோணம் பழனிபேட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம் பழனிப்பேட்டை 24, 25, 26 ஆகிய மூன்று வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று ஜூலை 31ந் தேதி நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகர மன்ற தலைவர். லட்சுமிபாரி தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன் ஆணையாளர். துரை செந்தில்குமார் நகர மன்ற துணை தலைவர். கலாவதி அன்புலாரன்ஸ் திமுக நகர அவைத் தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான துரைசீனிவாசன் நகர துணை செயலாளர். ப.நந்தாதேவி MC ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அலுவலர். தனலிங்கம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் கலை இலக்கிய பேரவைத் தலைவர். அன்பு MC, நகரமன்ற உறுப்பினர்கள். மோகன்ராஜ் ,ரேவதி, கன்னியப்பன், ராஜலட்சுமி, பிரகாஷ், சிட்டிபாபு உட்பட வட்ட செயலாளர்கள். .பாரி, சரவணன், பழனி உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக