மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொது மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை!!
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர். கமல் ஹாசன் அவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
இந்த வருகையின்போது, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மற்றும் சிவகாசி கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மருத்துவ அவசர காலங்களில் பயன்படும் வகையில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை பொது மக்களின் இலவசப் பயன்பாட்டிற்கு வழங்கினர். இந்த ஆம்புலன்ஸ் சேவையை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர். கமல் ஹாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர். A.G.மௌரியா, பொதுச் செயலாளர். ஆ.அருணாச்சலம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர். R.சொக்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.




கருத்துகள்
கருத்துரையிடுக