நெமிலி ஊராட்சிஒன்றியஅலுவலகத்தில் தூய்மைபணியாளர்களுக்கானஉபகரணங்களை வழங்கிய ஒன்றிய தலைவர். பெ. வடிவேலு!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தினந்தோறும் தங்கள் பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இடங்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தினந்தோறும் பணியாற்றுவதற்காக மண்வெட்டி, கை உறை, மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட, திடக்கழிவு மேலாண்மை பணிக்கு தேவையான பொருட்களை நேற்று நெமிலி பிடிஓ அலுவலகத்தில், ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.உடன் பிடிஓ சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்
கருத்துரையிடுக