புவனகிரி: அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம்!!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் நடைபெற்றது. ஆடி மாதம் தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் ஆலயத்தில் அம்மனுக்குப் பல்வேறு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குப் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்டு, கலவை சாதங்கள் நெய்வேதியம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக