மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்கு மதுரை செல்கின்றனர் சென்னை போலீசார்!!
மதுரை,இரு மதங்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் விதமாக பேசிய வழக்கு தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் மதுரை சென்று மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்த உள்ளனர்.
மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை. காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துற்கு முன் ஜாமீன் மனுவில் உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக