ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார்! ஐய்மன் ஜமால்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அய்மன் ஜமால் தோப்புகளில் கையெப்பமிட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னதாக காவல்துறை அதிகாரிகள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது உள்ள பிரச்சினைகள், சமீபத்தில் நடந்த சம்பவங்கள் என்ன நடந்தது என்று தெரியும் எனவே எனது முழு கவனம் சட்ட ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக முழு கவனம் செலுத்தப்படும். மேலும் பொதுமக்கள் தினந்தோறும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை சந்தித்து குறைகளை மனுவாக தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக