அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலை கேட் மீட்டிங் அதிமுகவினரை தடுத்து நிறுத்தம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், திருத்தணி சாலையில் எம்.ஆர்.எப் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் 4000 ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு களுக்காக அதிமுக சார்பில் கேட் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது திரளான போலீஸாரால் கேட் மீட்டிங் திரண்ட அதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்காக அரக்கோணம் எம்.எல்.ஏ .சு.ரவி தலைமையில் அண்ணா தொழிற்சங்க செயலாளர். கமலக்கண்ணன்
மாவட்ட துணை செயலாளர். மீனா ரகுபதி ஒன்றிய செயலாளர்கள். ஏ.ஜி.விஜயன், பழனி, பிரகாஷ் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். தண்டலம் அமுல்ராஜ் அண்ணா தொழிற்சங்க கண்டக்டர் குமார், அல்ட்ரா டெக் சுரேஷ் அசமந்தூர் ராஜா உள்ளிட்ட திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக