சென்னை பூங்கா நகர் கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழா!!
சென்னை, பூங்காநகர், கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துகுமாரசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சி சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் அமைந்துள்ள இடம் குறுகலாக இருப்பதால் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, மக்கள் வரிசையில் நின்று கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர். ஆர்.பிரியா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்.பி.ஸ்ரீராமுலு, சென்னை இணை மண்டல இணை ஆணையர் திருமதி ஜ.முல்லை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக