ஆவினங்குடியில் போதைப் பொருட்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டிய ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,ஆவினங்குடி ஆண்டாள் நகரில் விருத்தாசலம் சங்கர் என்பவர் பெங்களுரில் இருந்து ஹன்ஸ் போதை பொருளை வரவழைத்து, வாடகை வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 117 கிலோ ஹான்ஸ் போதை பொருட்களை கைப்பற்றியும், சங்கர் வயது 45, த/பெ நடேசன், சேலம் ரோடு மகாலட்சுமி மண்டபம் பின்புறம் விருத்தாசலம் என்பவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்களை பிடித்த காவல் துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக