கரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
கரூர் மாவட்டம்,கரூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் ரூ.40 கோடி மதிப்பில் கரூர் மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் மட்டுமின்றி மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் இந்தப் புதிய பேருந்துநிலையம்அமைக்கப்பட்டுள்ளது.இப்புதிய பேருந்து நிலையம், கரூரின் உட்கட்டமைப்புக்குமேலும்வலுசேர்த்துள்ளதுஎனபொதுமக்கள்கருத்துதெரிவித்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக