நெமிலி அருகே சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர். காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியம் சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக தலைமைஆசிரியர்.பரிதா தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர்.எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்களின் முன்னிலையில் .15/07/2025 இன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி கல்வியின் அவசியத்தை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர்.நரசிம்மன்நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.





கருத்துகள்
கருத்துரையிடுக