பண்ருட்டி மாமல்லன் பாரம்பரிய விளையாட்டு கலைக்கூடம் சார்பில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி நகர் மன்ற தலைவர். க. ராஜேந்திரன் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரம், திருவதிகை பகுதியில் நடந்து வரும் மாமல்லன் பாரம்பரிய விளையாட்டு கலைக்கூடம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளடங்கிய சமூக விழிப்புணர்வு பேரணி திருவதிகை யிலிருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாக பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு வந்தடைந்து. மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர். Dr.A.P.Jஅப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி நகரமன்ற தலைவர். ராஜேந்திரன் மற்றும் தமிழக வணிகர் சங்க மண்டல தலைவர். சண்முகம் மற்றும் செயலாளர். வீரப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர், உடன் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர். MGR Vicky Panruti Dmk இந்த நிகழ்ச்சியின் இறுதியாக போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து உதவி ஆய்வாளர். முரளி அவர்கள் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.







கருத்துகள்
கருத்துரையிடுக