அரக்கோணத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ரோட்டரி கிளப் மற்றும் பெண்களுக்கான மித்ரா ரோட்டரி கிளப் தேசிய சேவைத் திட்டத்தின் கீழ் அரக்கோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினருடன் இணைந்து சிறப்பு கண் சிகிச்சை முகாமை ஸ்ரீ கிருஷ்ண பாலிடெக்னிக்கில்நடத்தியது.அரக்கோணம் ரோட்டரி கிளப் தலைவர். பி.மனோகர் பிரபு மற்றும் அரக்கோணம் மித்ரா ரோட்டரி கிளப் தலைவர். டாக்டர். உமா சசி ராஜசேகர் இணைந்து தலைமை வகித்தனர்.
செயலாளர்கள். டி.லட்சுமிபதி மற்றும் கீதா செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரியைச் சேர்ந்த 300ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அகர்வால் கண் பரிசோதகர். டாக்டர்.பிரசன்னா தலைமையில் கண் பரிசோதனை செய்யபட்டது.முன்னாள் தலைவர். மணிகண்டன் நிர்வாகிகள் ஹரிகுமார், பிரதீப் மற்றும் மித்ரா ரோட்டரி நிர்வாகி பொற்கொடி ஹரி, கல்பனா வெங்கடேஷ் பாலிடெக்னிக் முதல்வர். ஜெகந்நாதன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி . என். எஸ். எஸ். ஒருங்கிணைப்பாளர். எம்.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக