வெங்கடாம்பேட்டை: மகிழ் முற்றம் துவக்க விழா!!
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மகிழ் முற்றம் மாணவர்கள் குழுக்கள் அமைத்தல் துவக்க விழா! தலைமை ஆசிரியர் உ. கனகசபை தலைமையில், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள், ITK உறுப்பினர்கள், உதவி ஆசிரியர், மாணவச் செல்வங்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தலைமையாசிரியர் மகிழ் முற்றத்தின் நோக்கங்கள் மற்றும் குழுக்களின் பணிகளைப் பறறி எடுத்துரைத்தார். பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் தலைவர் மற்றும் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக