அரக்கோணம்தசபுஜ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற யாகப் பூஜை!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் ஆலயம் பின்புறத்தில் தசபுஜ பத்ர காளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. மேலும் மழை வேண்டியும் மக்கள் தோஷங்கள் அகலவும் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக் காவும் கல்வி வேலை வாய்ப்புகள் எதிர்பார்ப்பு உடையவர் இளைஞர் களுக்காகவும் யாகம் நடத்தப்பட்டது. இதனை பூசாரி மணி ஏற்பாடுகள் செய்ய மணி சேகர் ஐயா யாகத்தை சிறப்பாக நடத்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மீனவர் சமுதாய காப்பாளர். செல்வம் மற்றும் கட்டிட பொறியாளர். இளையராஜா அதிமுக பிரமுகர் மீனா ரகுபதி உட்பட திரளான தாய்மார்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். யாகத்திற்கு பின் அனைவருக்கும்அன்னதானம்வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளில் பூசாரி மகேஷ் உடன் ஈடுபட்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக