நெவிலி அருகே சயனபுரம் கிராமத்தில்தோட்டகலை துறை சார்பில் பழம் வகைச் செடிகளும் கன்றுகள் வழங்கிய மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் பெருமாள்!!
!
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் ஊராட்சியில் இயற்கை வளம் செழிக்கவும், அவைகள் பாதுகாக்கவும் தோட் டகலை துறை சார்பில் நேற்று பழம் செடி வகைகளான பப் பாளி, கொய்யா, எலுமிச்சை போன்ற உடல் ஆரோக்கியம் தரும் கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ் வுக்கு தோட்டகலை துறை உதவி இயக்குனர் தமயேந்தி தலைமை தாங்கினார்.
வட்டார தோட்டகலை துறை அலுவலர் சுமித்திரா முன் னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் கலந்துக் கொண்டு 300 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பழச்செடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி. பெருமாள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக