கடலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை; நண்பர்களுடன் சிக்கிய அண்ணன்!!
கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 3 ஆண்டுகளுக்கு முன் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞர் சிறுமிக்கு 13 வயதிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த இளைஞர் பின்னர் அவரின் நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞர், அஜய், சூர்ய பிரகாஷ் என்கிற ஆதி சக்தி, அரவிந்த் ஆகிய நால்வர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்துள்ளனர். தலைமறைவான அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக