கரூர் அருள்மிகு முச்சிலியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டம், மேலப்பாளையத்தில் எழுந்தருளும் அருள்மிகு எல்லையரசு கருப்பண்ணசாமி, அருள்மிகு முச்சிலியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அதற்குண்டான ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பணி குழுவினருடன் இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக