கரூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அவர்களின்வழிகாட்டுதலின்படி கரூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், CBSE Cluster VI Athletic Meet 2025-2026 போட்டிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப., தமிழக தடகள தங்க மகன். மாரியப்பன், தங்கவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தடகள வீரர்கள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக