சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற லிதீக்கா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்று விழா!!
சென்னை கலைமாமணி மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற குரு திருமதி. சைலஜா அவர்களிடம் பயிற்சி பெற்ற மாணவி லிதீக்கா ஶ்ரீ அவர்களின் பாரதநாட்டிய அரங்கேற்ற விழா! சென்னை வாணி மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாரம்பரியபாரதநாட்டியத்தின்நுட்பங்களோடும், நவீன வெளிப்பாடுகளோடும் கூடியநடனங்களை அழகாக ஆற்றிய லிதீக்கா ஶ்ரீ, தனது தனித்துவமான திறமையால்அனைவரின் பாராட்டையும் பெற்றார்.இவ்விழாவில் முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர். அண்ணாமலை மற்றும் மாண்புமிகு புதுச்சேரி உள்துறை அமைச்சர். ஆ. நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை உபயோகமான உரையுடன் கலைமயமாக்கி, மாணவியை பாராட்டினர்.
பல்வேறு சமூக மற்றும் கலாச்சாரத் தலைவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், பக்தர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டு சிறுவயதிலேயே கலைத்துறையில் சாதனை புரிந்துள்ள லிதீக்கா ஶ்ரீக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக