திருச்சி புனித அண்ணாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 75 ஆவது ஆண்டு பவள விழா! அமைச்சர். கே. என் நெரு பங்கேற்பு!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் அமைச்சர். கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, இப்பகுதி மாணவிகளுக்கு 75 ஆண்டுகளாக கல்வி சேவையை வழங்கி வரும் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, இப்பள்ளியின் பவள விழா மலரையும் வெளியிட்டார். மேலும், பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில், மாநகராட்சி மேயர். அன்பழகன் அவர்களுடன், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக