திருவந்திபுரம்: 4 அடி நீள பாம்பு மீட்பு!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதை பார்த்து உடனடியாக பாம்பு பிடி வீரர். செல்லாவுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த அவர் வீட்டில் இறந்த நிலையில் இருந்த பாம்பு ஒன்றையும், 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றையும் லாவகமாக பிடித்து அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக