பண்ருட்டி திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் ரூபாய். 3.01 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடக்க விழா! தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்!!
கடலூர் மாவட்டம்,இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோயில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் திருவதிகை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோவிலில் ரூபாய் 3.01 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடக்க விழா இன்று 11.7.2035 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்யப்பட்டு குத்து விளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார். உடன் செயல் அலுவலர் ராஜ்குமார் கோயில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி முக்கியஸ்தர்கள் மாவட்ட நகர கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.





கருத்துகள்
கருத்துரையிடுக