கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய். 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படிப்பகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், இன்று கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூபாய் 3 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக