கடலூர்: லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது!!
கடலூர் மாவட்டம்,திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் நேற்று போடிச்செட்டி தெரு, கம்மியம்பேட்டை புறவழிச்சாலை ஆகிய பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கம்மியம்பேட்டை புதுநகர் நடராஜ் மகன் ராஜி, நாயுடு தெரு துரை மகன் பரசுராமன் ஆகிய 2 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக