கடலூர்: 154 தேர்வு மையங்களில் நடைபெற்ற குருப் 4 தேர்வு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (டிஎன்பிஎஸ்சி குருப் 4) கடலூர் மாவட்டத்தில் 12-ஆம் தேதி இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய 10 வருவாய் வட்டங்களைச் சேர்ந்த 154 தேர்வு மையங்களில் 212 தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்ட 64,143 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக