அரக்கோணம் அருகே காவனூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்!1000ற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவனூர் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு , அரக்கோணம் தாசில்தார். வெங்கடேசன் காவனூர் ஊராட்சி மன்ற தலைவர். தலைட்சுமி சந்திரன் முன்னிலையில் அரக்கோணம் ஆர்டிஓ வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்தார். பிடிஓ தாச பிரகாஷ் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர். நிர்மலா சவுந்தர்
கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்து உரிமைத் தொகை உள்ளிட்ட பல் வேறு துறை க்களுக்கான 1000 த்திற்கும் மேற்பட்ட குறை மனுக்களை காவனூர் கீழ்பாக்கம் வேலூர் கோணலம் ஊராட்சிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்று கொண்டார்;
பின்னர் பயனாளிகளுக்கு அரசின் நல திட்டங்களையும் வழங்கினார் . முகாமில் மாவட்டஉறுப்பினர் அம்பிகா துணை தலைவர். அன்னலட்சுமி தேவேந்திரன் வார்டு உறுப்பினர்கள் தணிகை போளூர் தலைவர். வெங்கடேசன் பெருமூச்சி தலைவர். நத்தகுமார் கீழ்பாக்கம் ஆதிலட்சுமி மண்டல தாசில்தார். முத்துகுமரன் சமூக பாதுகாப்பு தாசில்தார் பாஸ்கர் கிராம அதிகாரிகள் கார்த்தி தணிகாசலம் ராஜேஷ் நகர காவல் ஆய்வாளர். தங்க குருநாதன் சுகாதார நிலைய மருத்துவர். தேவவர்ஷினி சிவசங்கர் ஹெல்த் ஆய்வாளர்கள். சத்தியராஜ் செந்தில் தேவநாதன், மதன்மற்றும் பி எச் எஸ் சுப்பிரமணி உட்பட பலர் முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் செய்தால் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக