கரூர் அருகே வாங்கல் குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் தார் சாலை மேம்படுத்தும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி, வாங்கல் பழைய வாங்கலம்மன் கோவில் சாலை முதல் ஈஸ்வரன் கோவில் சாலை வரை, தார் சாலையை மேம்படுத்தும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக