அரக்கோணம் நகரத்தில் ஐந்து மினி பஸ் போக்குவரத்தை அமைச்சர்.ஆர்.காந்தி துவக்கி வைத்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் சோளிங்கர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் குக்கிரடிங்களை இணைக்கும் மினி பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர். ஜே. யு .சந்திரகலா தலைமை தாங்கினார் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் விழா ஏற்பாடு செய்து வரவேற்றார் மக்கட் தொடர்பு அதிகாரி அசோகன் தொகுத்து வழங்கினார். அமைச்சர் காந்தி கலந்துகொண்டு ஐந்து புதிய வழித்தடத்திற்கானஆணையை பேருந்து உரிமையாளர்களிடம் வழங்கி துவக்கி வைத்தார்.
அப்போது திமுக நகர செயலாளர். வி. எஸ்.ஜோதி துணை செயலாளர் தமிழ்வாணன் சுற்று சுழல் அணி துணை அமைப்பாளர். ஜெனிஷ் ஒன்றிய செயலாளர்கள். பசுபதி, பெ.வடிவேலு மற்றும் அன்புலாரான்ஸ் பி.மூர்த்தி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும்அரசு அலுவலர்கள் திரளாகவும் கலந்து கொண்டனர். அரக்கோணம் மோட்டார் ஆய்வாளர். முத்துகுமார் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக