ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய மதி வேந்தன். எம். எல். ஏ!!
நாமக்கல் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார்கள். அதன் ஒரு பகுதியாக, இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கி, குழந்தைகளை வரவேற்று, வாழ்த்துகளை தெரிவித்து ராசிபுரம். மதிவேந்தன். எம். எல். ஏ.அவர்கள் நிகழ்ச்சி சிறப்பித்தார்.
நிகழ்வில் நகர மன்ற தலைவர். கவிதா சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். NR. சங்கர், மாவட்ட கல்வி அலுவலர். மகேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக