கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டம்! ஜெயக்குமார் ஐ.பி.எஸ் பங்கேற்பு!!
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் தலைமையில், இன்று 6.6.2025 ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை பாதுகாப்பதற்கான நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட குழு ( Special Task Force) உறுப்பினர்களுடன் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். P. நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர். சார்லஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர். R. சுந்தர், மாவட்ட சமூக நல அலுவலர்.E. சித்ரா, அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர். D. குமார், காவல் ஆய்வாளர்கள்.திபா , வள்ளி, ரேவதி, ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக