அரக்கோணம் தனியார் பள்ளியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விருது!போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் வழங்கியது!!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஸியேஷன் சார்பாக2024 - 25ம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 95மாணவ மாணவியரை பாராட்டி விருதுகள் வழங்கும் விழா! தனியார் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு போலிஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஸியடின்மாவட்ட தலைவர்.மான்மல் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர். எம். எஸ்.குணசீலன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம்பல்லவன் குழும நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர். டிஜிபி. மோத்திலால் விவேகானந்தா அம்பாரி கல்வி குழுமத்தின் செயலாளர் .செந்தில்குமார்
2025-26ம் ஆண்டின் ரோட்டரி சங்க தலைவர். மனோகர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு 95 பிளஸ் 1 பிளஸ் 2 மற்றும் 10வது வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர் மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டிப் பேசினார்கள். நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைய்ப்பாளர்களாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர். கோவிந்தராஜ் அக்ஷயா சூப்பர் மார்க்கெட் தலைவர். ஆனந்தன் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள். மகேஷ், பிரபாகரன், வடிவேல் ஆகியோருடன் ஜி. டி. கமலக்கண்ணன் ஆர் சுப்பிரமணிய ராஜா பிரகாஷ் அண்ணாமலை ரயில் பயணங்கள் சங்கதலைவர் நைனா மாசிலாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியினை வள்ளுவர் கல்வி மையம் தலைவர். சீனிவாசன் தொகுத்து வழங்கினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.





கருத்துகள்
கருத்துரையிடுக