ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டக்கல் சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகம்!!
ஈரோடு மாவட்டம்,ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டகல்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாமை மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர். முத்துசாமி அவர்கள் தொடங்கி வைத்து, எலவமலை பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சமூகநலத் திட்டங்களை பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார் . நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர். அந்தியூர் செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். KE. பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக