பண்ருட்டி அருகே மேலப்பாளையம் ஜான் டூ யூ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வர பத்மநாபன் உதவி ஆய்வாளர். முரளி ஆகியோர் பண்ருட்டி மேலபாளையம் ஜான் டூயூ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளின் முன்பாக சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து நம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக