பண்ருட்டியில் பள்ளிவாசலுக்கு அனுமதி தந்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடலூர் மாவட்டம்.பண்ருட்டி லிங்க் ரோடு, 5-வது தெருவில் கட்டிவரும் பள்ளிவாசலுக்கு அனுமதி தந்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையால் ஆர்ப்பாட்டம் அனுமதி மறுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் புதுச்சேரி கோட்டை செயலாளர். முருகையன் மற்றும் கடலூர் மாவட்ட தலைவர்.சக்திவேல் கடலூர் மாவட்ட செயலாளர். மணிகண்டன், வெங்கடேசன் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.இரா. வேல்முருகன் மற்றும் இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பெரியவர்கள் இதில் கலந்துகொண்டு கைதாகினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக