நாமக்கல்லில் மேற்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
நாமக்கல் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில்,
நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். கே. எஸ். மூர்த்தி அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர். மா. மதிவேந்தன் அவர்கள், மாண்புமிகு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர். ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர். கே. ஆர். என். இராஜேஷ்குமார் அவர்கள், மாண்புமிகு ஈரோடு மக்களவை உறுப்பினர். கே.ஈ.பிரகாஷ் அவர்கள், மாண்புமிகு நாமக்கல் மக்களவை உறுப்பினர். வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்களுடன் இணைந்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சதீஷ்.




கருத்துகள்
கருத்துரையிடுக