பண்ருட்டியில் நடைபெற்ற நகர ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். P.N. இராஜா அவர்களின் அறிவுரையின்படி பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளர்கள். முரளி மற்றும் செந்தில்குமார் அவர்களின் தலைமையில்
பண்ருட்டி SPDR திருமண மண்டபத்தில் பண்ருட்டி நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றியும், பண்ருட்டி நகர பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகன நிறுத்தம் செய்யவும், சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்கவும், ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க அறிவுறுத்தியும் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக