கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பெட்டிஷன் மேளா!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.கோடீஸ்வரன் அவர்கள் தலைமையில், கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.

பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை  முன்னிட்டு பெட்டிஷன் மேளாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் போதை ஒழிப்பு  சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். சிவப்பிரகாசம் அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!